Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் ... பழநி தைப்பூச விழாவில் இன்று திருக்கல்யாணம்;  நாளை தேரோட்டம் பழநி தைப்பூச விழாவில் இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேரூர் பட்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் பேரூரா.. பட்டீசா.. என பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பேரூர் பட்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் பேரூரா.. பட்டீசா.. என பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

10 பிப்
2025
07:02

தொண்டாமுத்தூர்; கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடந்தது.


கோவையில் முக்கிய ஸ்தலங்களில் ஒன்றாகவும், ஆயிரம் ஆண்டு பழமையான கோவிலாகவும் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. இக்கோவிலில், 14 ஆண்டுகளுக்கு பின், இன்று கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக, கடந்த, 2023ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், விமான கோபுரம் ராஜகோபுரம், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு பாலாலயம் செய்யப்பட்டது. தொடர்ந்து திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த, 4ம் தேதி, விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. கடந்த, 7ம் தேதி, யாகசாலை பூஜைகள் துவங்கியது. இன்று காலை, 5:45 மணிக்கு, ஆறாம் கால யாக பூஜையும், 108 மூலிகை பொருட்கள் ஆகுதி நடந்தது. இதனைத்தொடர்ந்து, காலை, 9:05 மணிக்கு, பேரூர் பட்டீஸ்வரர் கோவில், ஸர்வ ஸாதகம் செந்தில் ராஜ குருக்கள் தலைமையில், சிவாச்சாரியார்கள், யாகசாலையில் இருந்து, ராஜகோபுரம் மற்றும் விமான கோபுரங்களுக்கு, புனித நீர் கலசங்கள் கொண்டு வந்தனர். சரியாக, காலை, 9:50 மணிக்கு, கொடி அசைக்க, பட்டீஸ்வரர் மூலஸ்தான கோபுரத்திற்கு, புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, ராஜகோபுரம், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, யாகசாலையிலிருந்து, கும்ப கலசங்கள் புறப்பட்டபோது, வானில், கருடன் கோவிலை சுற்றி வட்டமடித்தவாறு சுற்றி வந்தது. இதனைக்கண்ட பக்தர்கள், பேரூரா., பட்டீசா., என பக்தர்கள் கோஷமிட்டு, வழிபட்டனர். கும்பாபிஷேகத்தை காண, லட்சக்கணக்கான பக்தர்கள் வந்ததால், பேரூரில் உள்ள வீதிகள் மற்றும் கட்டடங்களின் மாடி முழுவதும், மக்களின் தலைகள் மட்டுமே தென்பட்டது. கும்பாபிஷேகத்திற்காக, சிறுவாணி மெயின் ரோடு, பேரூர் பகுதியில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. கும்பாபிஷேக விழாவில், பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் மனைவி சாந்தி, கலெக்டர் கிராந்தி குமார், எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், முக்கிய பிரமுகர்கள் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி தைப்பூச திருவிழா விழாவை முன்னிட்டு பக்தர்கள் குவிந்தனர். நேற்று இரவு முதல் பாதயாத்திரையாக ... மேலும்
 
temple news
திருச்செந்தூர் :திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் இன்று தைப்பூசத் திருவிழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
மதுரை; தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் குவிந்தனர். சுமார் மூன்று மணி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக அமையப்பெற்றது ... மேலும்
 
temple news
கடலூர் ; வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 154 வது தைப்பூச ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar