பதிவு செய்த நாள்
24
பிப்
2025
02:02
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவத்தின் நான்காவது நாள் விழாவில் இன்று அன்ன வாகனத்தில் சுவாமி உலா வந்து அருள்பாலித்தார்.
விழாவை முன்னிட்டு கோயிலின் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில், காளஹஸ்தீஸ்வரர் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரின் உற்சவம் மூர்த்திகளுடன் பஞ்சமூர்த்திகளுக்கும் வேத பண்டிதர்கள் மற்றும் அர்ச்சகர்கள் தீப, தூபம், கற்பூர ஆர்த்தி செய்தனர். ஞான சக்தியாகிய தேவி, அன்ன வாகனத்தில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். மங்கள வாத்தியங்கள் முழங்க மாட வீதிகளில் சுவாமி ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். கலைஞர்களின் நாட்டுப்புற பாடல்கள், நடனங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு இடையில் சாமி ஊர்வலம் தொடர்ந்தது. அன்னப் பருகும் பாலை அருந்தி, தண்ணீரைக் கைவிட்டது போல, அன்ன வாகனத்தில் ஊர்வலமாக செல்லும் கடவுளைத் தரிசிப்பவர்கள் துன்பங்களிலிருந்து விடுபட்டு அமைதி அடைவார்கள் என்று பக்தர்கள் ஆழமாக நம்புகிறார்கள். இதன் மூலம், பக்தர்கள் நான்கு மாட வீதிகளில் இறைவனை தரிசித்து, பக்தியுடன் கற்பூர ஆர்த்தி வழங்கினர். இந்த ஊர்வலத்தில் கோயில் அதிகாரிகள் ஊழியர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.