காளஹஸ்தி சிவன் கோயிலில் மஹாசிவராத்திரி விழா; சுவாமி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24பிப் 2025 01:02
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் மஹாசிவராத்திரி பிரம்மோற்சவத்தில் நேற்று சூரியபிரபை வாகனத்தில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரும் சப்பரத்தில் ஞானப் பிரசுனாம்பிகை தாயாரும் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதே போல் இரவு பூத வாகனத்தில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் - கிளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மேளத் தாளங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்து வாகனங்களில் அமர்த்தி நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இந்த ஊர்வல நிகழ்ச்சியில் கோயில் அதிகாரிகள் ஊழியர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.