நடுவீரப்பட்டு; சி.என்.பாளையம் குழந்தை சுவாமி சித்தருக்கு அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது. சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் உள்ள பாலசித்தர் குழந்தை சுவாமி சித்தருக்கு நேற்று புரட்டாசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி, நேற்று காலை 10:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மதியம் 1:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. அதனை தொடர்ந்து அமுது படையல் நடந்தது. பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு சித்தர் குழந்தை சுவாமியை வழிபட்டனர். அதேபோல் நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் உள்ள சித்தர் பச்சகேந்திர சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.