Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெள்ளீஸ்வரர் கோவிலில் புதிய ... மதுரை அழகர்கோவில் அருகே காஞ்சி மகா பெரியவா கோயில்; மார்ச் 6ல் பூமி பூஜை மதுரை அழகர்கோவில் அருகே காஞ்சி மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெண்கள் மீதான வன்முறை அதிகரிப்பு: மாதா அமிர்தானந்தமயி கவலை
எழுத்தின் அளவு:
பெண்கள் மீதான வன்முறை அதிகரிப்பு: மாதா அமிர்தானந்தமயி கவலை

பதிவு செய்த நாள்

04 மார்
2025
10:03

நாகர்கோவில்; ‘‘கட்டுப்பாடு இல்லாத உணவு வகைகள் காம உணர்வுகளை அதிகரிக்கின்றன. மதுவும் போதைப் பொருட்களும் பெண்கள் மீதான வன்முறையை அதிகரிக்கிறது,’’ என, சேவா பாரதி வெள்ளி விழாவையொட்டி நாகர்கோவில் அமிர்தா பல்கலையில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்ற கர்மயோகினி நிகழ்வில் மாதா அமிர்தானந்தமயி பேசினார்.


இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: குழந்தைகளுக்காக தியாகம் அனுபவிக்கும் தாய்மை உள்ள நாடு பாரதம். ஆண்,- பெண் வேறுபாடு இல்லாமல் ஒரே மாதிரியான அன்பு செலுத்த தாய்மையால் மட்டுமே முடியும். நாட்டை காக்க, நாட்டுக்காக சேவை செய்ய ஒரு புனர்ஜென்மம் அளிக்க பெண்களால் மட்டுமே முடியும். உலகில் ஈஸ்வரனுக்கு ஒரு உருவம் கொடுக்க வேண்டும் என்றால் ஆணைவிட பெண்தான் பொருத்தமாக இருக்கும். பெண் சக்தி மீண்டும் விழித்தெழ வேண்டும். மாற்றம் ஏற்படுத்த நம்மால் தான் முடியும். நாம் சுடர்விடும் சூரியன்கள். அழுது கொண்டிருக்க வேண்டியது இல்லை. வாழ்க்கைக்கு கல்வி அவசியம். அத்துடன் பண்பாடும் முக்கியம். பாலியல் விவகாரங்களை இன்று கட்டுப்படுத்த முடியவில்லை. போதை ஏறிய குரங்காக மனம் கட்டுப்பாடு இல்லாமல் போய் விட்டது. குழந்தைகளுக்கு தாய் அறத்தை போதிக்க வேண்டும். ஒரு பொருளை நாம் அடையும் போது மீதமுள்ளது மற்றவர்களுக்கு பயன்படும் என்பதை மறக்கக்கூடாது. இன்று குழந்தைகள் அம்மாவிடம் இல்லை. மாறாக ஆயாக்களிடம் இருக்கின்றனர்.


பணிகளுக்கு மத்தியிலும் பெற்றோர் குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்க வேண்டும். அலைபேசியையும் டிவி சீரியலையும் குறைத்து குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்க வேண்டும். கட்டுப்பாடு இல்லாத உணவு வகைகள் காம உணர்வுகளை அதிகரிக்கிறது. இறைவன் எங்கு நிறைந்திருந்தாலும் கோயில் தரிசனம் தேவை என்பதை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும். பால் தருவது பசு என்றாலும் அந்த பால் கிடைப்பது அதன் மடியில் இருந்து மட்டுமே என்பதை அறிய வேண்டும். நம் பாரதத்தின் பண்பாட்டால் குடும்பங்கள் சிதையாமல் உள்ளன. பெண்ணும் ஆணும் பரஸ்பரம் ஆள்வதாக நினைப்பது தேவையற்றது. இருவரும் பக்கபலமாக வாழ வேண்டும். அப்போது தான் சமூகம் பலமாகும். மதுவும், போதையும் பெண்கள் மீதான வன்முறைக்கு காரணமாக உள்ளது. இதை கட்டுப்படுத்த வேண்டும். வரும் காலம் பெண்களுக்கான வெற்றிக்காலம். இவ்வாறு அவர் பேசினார். ஆர்.எஸ்.எஸ்., அகில பாரத பொது செயலாளர் தத்தாத்ரேயா கோசபலே, டி.ஆர்.டி.ஓ., முன்னாள் தலைமை இயக்குனர் டெஸ்ஸி தாமஸ், டாக்டர் எம்.ஜி.ஆர்., பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷையன் உள்ளிட்டோர் பேசினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில், 108 திவ்யதேசங்களில் 20வது தலமாகவும், 40 ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு அருகே, தத்தமங்கலம் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.கேரளா ... மேலும்
 
temple news
கோவை: மார்கழி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, கோவை, உக்கடம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி கோட்டைமேடு ஐயப்பன் கோயிலில் 10ம் ஆண்டு மண்டலபூஜை விழா முன்னிட்டு ஐயப்பன் சாமி ஊர்வலம் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அருட்கோட்டம் முருகன் கோவிலில் மகாலட்சுமி சிலையின் கண் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar