Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெண்கள் மீதான வன்முறை அதிகரிப்பு: ... ஜல்லிப்பட்டி பெரிய விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா ஜல்லிப்பட்டி பெரிய விநாயகர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை அழகர்கோவில் அருகே காஞ்சி மகா பெரியவா கோயில்; மார்ச் 6ல் பூமி பூஜை
எழுத்தின் அளவு:
மதுரை அழகர்கோவில் அருகே காஞ்சி மகா பெரியவா கோயில்; மார்ச் 6ல் பூமி பூஜை

பதிவு செய்த நாள்

04 மார்
2025
10:03

மதுரை; மதுரையை அடுத்த பொய்கைக்கரைப்பட்டியில், ஸ்ரீமகா பெரியவா கோயில் வாஸ்து, பூமி பூஜை நாளை மறுநாள் வியாழக்கிழமை (மார்ச் 6) நடக்க உள்ளது.


மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில், அதன் நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாட்டில் கோயில் கட்டப்பட உள்ளது. பொய்கைக்கரைப்பட்டி - அலங்காநல்லூர் சாலையில் உள்ள அழகர்கோவில் தெப்பக்குளம் எதிரே, அரசுப் பள்ளிக்கு அடுத்துள்ள சிட்டி பால்ஸ் வளாகத்தில் இக்கோயில் அமைய இருக்கிறது. மார்ச் 6, காலை 9 மணி முதல் 12.30 மணிக்குள், வேத விற்பன்னர்கள், ஆன்மிக பெரியவர்கள், ஆன்றோர் பெருமக்கள் சூழ கோயிலின் வாஸ்து, பூமி பூஜையோடு கோயில் திருப்பணி தொடங்குகிறது. நிகழ்வில் சிறப்பு ஹோமங்கள், ஆராதனைகள், மஹன்யாசம் உள்ளிட்ட வைப்பவங்கள் நடத்தப்பட இருக்கிறது.  உயர்நீதிமன்ற வழக்கறிஞர் புதூர் வி.ராமகிருஷ்ணன் தலைமையில், ஆடிட்டர் சேது மாதவா, நந்தினி ரியல் எஸ்டேட் அதிபர் எம்.ஆர்.பிரபு முன்னிலையில், மதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடம் தலைவர் சுவாமி ஸ்ரீ நித்திய தீபாநந்தா குத்துவிளக்கேற்றி திருப்பணியைத் தொடங்கி வைத்து ஆசி வழங்குகிறார்.  தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றனர். பங்கேற்கும் அனைவருக்கும் ஸ்படிக மாலை, விபூதி பிரசாதம், ஸ்ரீமகா பெரியவா புகைப்படம், அழகர்கோவில் பிரசாதம் மற்றும் அன்னப்பிரசாதம் வழங்கப்பட உள்ளது. திருப்பணிக்கு ஒரு சதுர அடிக்கு ரூபாய் 3,500 வீதம் 2 சதுர அடி, 5 மற்றும் 10 சதுர அடி வீதம் தங்கள் பங்களிப்பை வழங்கலாம். ஒரு லட்சதிற்கு மேல் வழங்கும் பக்தர்களின் பெயர்கள் கல்வெட்டில் பொறிக்கப்பட உள்ளது. விவரங்களுக்கு மதுரை அனுஷத்தின் அனுகிரஹம் நிறுவனர் நெல்லை பாலு - 94426 30815 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுடில்லி: ‘ஒருவர் நிரந்தரமான சந்தோஷத்தில் வாழ வேண்டுமெனில், தர்ம மார்க்கத்தில் இருப்பதுதான் ஒரே ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; தருமபுரம் ஆதீனத்தில் கோலாகலமாக நடந்த மணிவிழாவின் போது குருமகா சன்னிதானம் சிவஞான கொலு ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலையில் இன்று கார்த்திகை வனபோஜன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. உற்சவ ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; நத்தம் அய்யாபட்டியில் காளியம்மன் கருப்புசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
மேலூர்; ராஜஸ்தானை சேர்ந்த சமண துறவிகள் முனி ஹிமான்ஷூ குமார்ஜி,முனி ஹேமந்த் குமார்ஜி. இவர்கள் உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar