Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கதிர்வேல் சுவாமி, முத்துமாரியம்மன் ... மாசி மக தீர்த்தவாரி விழா சுவாமிகளுக்கு வரவேற்பு மாசி மக தீர்த்தவாரி விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் கோவிலில் தீ பந்த சேவை; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாதர் கோவிலில் தீ பந்த சேவை; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

14 மார்
2025
07:03

மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், தேர் திருவிழாவை முன்னிட்டு, நடந்த தீபந்த சேவையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடனை செலுத்தினர்.


கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம் காரமடை அரங்கநாதர் கோவில். இக்கோவிலில் நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர். தேர் நிலையை அடைந்தவுடன், பக்தர்கள் புனித தீர்த்த தெப்பக்குளத்தில் இருந்து, தோல் பையில் தண்ணீரை எடுத்து வந்து, உற்சவர் அரங்கநாத பெருமாள் உள்பட பல்வேறு சுவாமிகள் மீது ஊற்றி நேர்த்திக்கடனை செலுத்தினர். ஒரு பக்தர், மூன்று முறை தண்ணீர் எடுத்து வந்து சுவாமிகள் ஊற்றினர். நேற்று மாலை பல்வேறு ஊர்களில் இருந்து, பக்தர்கள் தீ பந்தங்களை எடுத்து வந்து, நான்கு ரத வீதிகளில் ஆடி கோவிலுக்குச் சென்று நேர்த்தி கடனை செலுத்தினர். நூற்றுக்கணக்கான ஜமாப் குழுவினர் மேளம் அடித்துச் செல்ல, பக்தர்கள் தீப்பந்தங்களை தூக்கி ஆடி வந்தனர். சரவணம்பட்டியைச் சேர்ந்த கரிவரத பெருமாள் கோவிலுக்கு உட்பட்ட பக்தர்கள், 650 மீட்டர் காடா துணி கொண்ட ராட்சத தீ பந்தத்தை தெப்பக்குளத்திற்கு எடுத்து வந்தனர். அங்கு சிறப்பு பூஜை செய்த பின், மாலை, 6:00 மணிக்கு தீபந்தத்தை, 80க்கும் மேற்பட்ட தாசர்கள் எடுத்து ஆடி சென்றனர். 


இதுகுறித்து சரவணம்பட்டியை சேர்ந்த தாசர்கள் கூறுகையில், நாங்கள் நான்கு தலைமுறைக்கு மேலாக, அரங்கநாத பெருமாள் கோவிலுக்கு, கிராம மக்கள் ஒன்றிணைந்து தீப்பந்தத்தை எடுத்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தி வருகிறோம். இந்த விழாவில் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் பங்கேற்றனர். இவ்வாறு தாசர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி; அவிநாசி கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அற்புத காட்சியை ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருப்பட்டினத்தில் நடந்த மாசிமக விழாவில் 6பெருமாள்கள் தீர்த்தவாரியில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி; கதிர்வேல் சுவாமி, முத்துமாரியம்மன் கோவில்களில்பாலாலயம் விழா நடந்தது. கதிர்காமத்தில் ... மேலும்
 
temple news
விழுப்புரம்; கோலியனூர் புத்துவாய் அம்மன் கோவிலில், மாசி மக உற்சவம் நடந்தது. விழுப்புரம் அடுத்த ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று உண்டியல் எண்ணும் பணி நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar