Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மருதமலை கோவிலில் கும்பாபிஷேக பணிகள் ... பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில் குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் நடைபெற்று வந்த மாசி உற்சவம் நிறைவு
எழுத்தின் அளவு:
குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் நடைபெற்று வந்த மாசி உற்சவம் நிறைவு

பதிவு செய்த நாள்

19 மார்
2025
04:03

பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற்று வந்த மாசி உற்சவம் நிறைவடைந்தது.


கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம் கடந்த மார்ச் 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக தேவஸ்தானத்துக்கு சொந்தமான, 38 யானைகளில், தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று யானைகள் பங்கேற்ற யானையோட்டம் நிகழ்ச்சி நடந்தது. இதில் பாலு என்ற யானை வெற்றி பெற்றது. பத்து நாட்களில் நடந்த உற்சவத்தில், இந்த யானை மீது உற்சவர் அமர்ந்து எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். நாள்தோறும் மூலவருக்கு விசேஷ அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது. விழா நாட்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றபடி உற்சவமூர்த்தியையும், மூலவரையும் வழிபட்டனர். விழாவையொட்டி 10 நாட்களும் பக்தர்களுக்கு கோவில் தேவஸ்தானம் சார்பில் அன்னதானம், அன்னலட்சுமி மண்டபத்திலும், பந்தல்களிலும் வழங்கி வந்தனர். இந்த நிலையில் உற்சவத்தின் நிறைவு நாளான இன்று பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை ஐந்து யானைகளின் அணிவகுப்பில் செண்டை மேளம் முழங்க உற்சவமூர்த்தி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பிற்பகல் சிறப்பு அலங்காரத்தில் உற்சவமூர்த்தி எழுந்தருளி வீதி உலா வந்தனர். கோவில் வளாக சிறப்பு மண்டபத்தில் அமர வைத்துள்ள உற்சவமூர்த்திக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உற்சவர் நீராடும் "ஆறாட்டு நிகழ்ச்சிக்காக நந்தன் என்ற யானை மீது உற்றவர் எழுந்தருளினர். தொடர்ந்து நடந்த ஆறாட்டு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ( ஜூலை 14) அதிகாலை மகா ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று  அதிகாலை மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
மதுரை; முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பின் ... மேலும்
 
temple news
விருதுநகர்; தென்திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் ... மேலும்
 
temple news
சுப்ரமணிய சுவாமியின் கருவறை 773 இல் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில், அவரது படைத்தலைவன் சாத்தன் கணபதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar