Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ... பெரியகுளம் பகவதியம்மன் கோயில் திருவிழா நிறைவு பெரியகுளம் பகவதியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில் குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில் குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

19 மார்
2025
05:03

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே ஜமீன்ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.


பொள்ளாச்சி அருகே, ஜமீன்ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா, ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு திருவிழா கடந்த 4-ம் தேதி சக்தி கும்பஸ்தானத்துடன் துவங்கியது. இதையடுத்து, கோவிலில் பூவோடு வைக்கப்பட்டது. கொடுமுடி, பழநி, நல்லுாத்து, கூடுதுறை, தெய்வகுளம் தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. தினமும் மாலையில் புனித தீர்த்தங்கள் கொண்டு அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. இந்நிலையில், நேற்று காலை 7:00 மணிக்கு, குண்டம் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. மாலை 4:00 மணிக்கு விநாயகர் கோவிலில் இருந்து பூவோடு புறப்படுதல், இரவு 8:00 மணிக்கு  அகத்துார் அம்மன் தீர்த்தம் கொண்டு வருதல், இரவு 9:00 மணிக்கு அக்னி குண்டம் வளர்க்கப்பட்டது. இன்று காலை பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாகாளியம்மன், குண்டத்து காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்தனர். விரதம் இருந்த பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என, பக்தி கோஷம் எழுப்பியப்படி, குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து, அம்மனுக்கு பொங்கல் வைத்தல் மற்றும் பக்தர்கள் கோவிலுக்கு மாவிளக்கு எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. நாளை, அம்மன் ஊர்வலம், மஞ்சள் நீராடுதல், மகா அபிஷேகம், ஆராதனை பூஜைகள் நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி: காரை அங்காள பரமேஸ்வரி கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.செஞ்சி அடுத்த காரை கிராமத்தில் புதிதாக ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ரிஷபேஷ்வரர் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் சன்னதி கலசத்திற்கு ... மேலும்
 
temple news
கரூர்; கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை முத்தாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தருமபுரம் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் இன்று 28ம் தேதி கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar