Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோயிலுக்கு விதவிதமான காவடி ... சாத்துாரில் மண்ணில் புதைந்து வரும் அவ்வையார் கோயில் சாத்துாரில் மண்ணில் புதைந்து வரும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில் வளாகம் முழுவதும் ப்ளக்ஸ் போர்டுகள், மூச்சு திணறலால் தவிக்கும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
கோயில் வளாகம் முழுவதும் ப்ளக்ஸ் போர்டுகள், மூச்சு திணறலால் தவிக்கும் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

22 மார்
2025
05:03

திருப்புவனம்; திருப்புவனம் மாரியம்மன் கோயில் வளாகம் முழுவதும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பலரும் ப்ளக்ஸ் போர்டுகள் வைத்திருப்பதால் காற்றோட்டம் இல்லாமல் மூச்சு திணறலால் பக்தர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். திருப்புவனம் மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி அதிகாலை நான்கு மணி முதல் பக்தர்கள் கோயிலுக்கு வர தொடங்குகின்றனர். பக்தர்கள் அக்னிசட்டி, பொம்மை, ஆயிரம் கண்பானை, பால்குடம் ஏந்தி வந்து திருவிழா வரை அம்மனுக்கு செலுத்துவார்கள், தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் கோயில் வளாகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தெரியாமல் இருக்க தென்னங்கீற்று கொட்டகையும் போடப்பட்டுள்ளது. கோயிலின் உட்புறத்தை சுற்றி பல இடங்களில் வணிக நிறுவனங்கள் உட்பட பலரும் மெகா சைஸ் பிளக்ஸ் போர்டுகள் நெருக்கமாக வைத்துள்ளனர். இதனால் உட்புற காற்று வெளியேறவே இல்லை. ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலினுள் உள்ள போது வெளிகாற்று வராமல் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுகின்றனர். கோயில் வளாகத்தில் அக்னிசட்டி செலுத்தும் இடத்தில் பிளக்ஸ் போர்டுகள் இருப்பதாலும், அக்னிசட்டி ஏந்தி வலம் வரும் போது தீப்பொறி பட்டு விபத்து ஏற்படவும் வாய்ப்புண்டு, பிளக்ஸ் போர்டு வைக்க இடம் பிடிப்பதிலும் மோதல் உருவாகிறது. போலீசாரிடம் எந்த வித அனுமதியும் பெறாமல் பலரும் தன்னிச்சையாக பிளக்ஸ் போர்டுகள் வைத்துள்ளனர். நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க உள்ள நிலையில் கோயிலின் உள்ளே உள்ள பிளக்ஸ் போர்டுகளை அகற்ற வேண்டும், பக்தர்கள் நெரிசலின்றி அம்மனை தரிசிக்க உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவில், பெருமாளின், மங்களாசாசனம் பெற்ற, 108 ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூரில் பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலில், பங்குனி ... மேலும்
 
temple news
திருச்சி; ஆழ்வார்களால் பாடப்பெற்றதும், 108 திவ்ய தலங்களுள் ஒன்றானதாகவும் விளங்குவது திருவெள்ளரை ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் மகாமுத்து வராகி அம்மன் கோயில் மண்டலாபிஷேகம் நடந்தது. இக்கோயில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் உபகோயிலில் கும்பாபிஷேக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar