பதிவு செய்த நாள்
27
மார்
2025
05:03
கடலுார்; கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் பங்குனி மாத பிரதோஷத்தையொட்டி இன்று காலை பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், உற்சவர் பிரதோஷ நாயகருக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலை பிரதோஷ வேளையில் நந்தி பகவானுக்கு விபூதி, மஞ்சள், பால், தயிர், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.