காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் பங்குனி ஏகாதசி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2025 12:04
காரமடை; பங்குனி மாதம் சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீரங்கநாதர் பச்சை பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பங்குனி சுக்ல பட்ச ஏகாதிசியான இன்று (08ம் தேதி) அதிகாலை மூலவர் சிறப்பு திருமஞ்சனம் கால சந்தி பூஜை முடிந்து திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளிய ஸ்ரீதேவி பூதேவி சமேத அரங்கநாதருக்கு மண்டபத்தில் விஷ்வக்சேனர் ஆராதனம் , புண்யா வசனம் நவ கலச ஆவாஹனம் , ஸ்தபன திருமஞ்சனம் நடந்தது. அப்போது பஞ்ச சுக்தம் திவ்ய பிரபந்தத்தில் உள்ள நீராட்டம் பாசுரங்கள் சேவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பச்சை நிறப் பட்டுடுத்தி ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் ரங்கநாதர் வெள்ளி சப்பரத்தில் வெண்பட்டு குடை சூழ மேள தாளம் முழங்க திருக்கோவில் வலம் வந்து ஆஸ்தானம் அடைந்தார். தொடர்ந்து உச்சகால பூஜை சாற்றுமுறை சேமிக்கப்பட்டு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இந்த வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.