Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீஞ்சூர் ஏகாம்பரநாதர் கோவிலில் ... பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பங்குனி தேரோட்டம்; பேரூரா, பட்டீசா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்கனூர் கொண்டத்து வனபத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் விழா
எழுத்தின் அளவு:
சிங்கனூர் கொண்டத்து வனபத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் விழா

பதிவு செய்த நாள்

08 ஏப்
2025
05:04

பல்லடம்; பல்லடம் அருகே, சிங்கனூர் கொண்டத்து வனபத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா விமரிசையாக நடந்தது.


பல்லடத்தை அடுத்த, கணபதிபாளையம் ஊராட்சி, சிங்கனூர் கிராமத்தில் கொண்டத்து வனபத்ர காளியம்மன் கோவில் உள்ளது. இதன், 21ம் ஆண்டு குண்டம் திருவிழா, மார்ச் 13 அன்று பூ கேட்டல் நிகழ்வுடன் துவங்கியது. தொடர்ந்து, 28ம் தேதி பூச்சாட்டுதல், ஆயக்கால் போடுதல் நிகழ்வுகள் நடந்தன. ஏப்., 2ம் தேதி, கிராம சாந்தி, கொடியேற்றத்துடன் குண்டம் திருவிழா துவங்கியது. இதனையடுத்து, வசந்த விழா, சீர்வரிசை கொண்டு வருதல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், அம்மன் திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தன. நேற்று காலை, 7.00 மணிக்கு, குண்டம் திறப்பு பூப்போடுதல், பூவோடு எடுத்தல், வேல் கழுவுதல், அம்மை அழைத்தல் நடைபெற்றது. இன்று காலை, 7.00 மணிக்கு குண்டம் பூ மிதித்தல் நிகழ்வு நடந்தது. ஓம் சக்தி பராசக்தி என்ற கோஷம் முழங்க பெண்கள், தாய்மார்கள், சிறுவர் சிறுமியர், இளைஞர்கள் இளம்பெண்கள் என, நூற்றுக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செய்தனர். வெண்ணை காப்பு அலங்காரத்தில் கொண்டத்து வன பத்திர காளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் விழா குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை மறுபூஜை அபிஷேகம், மஞ்சள் நீராட்டு விழா உள்ளிட்டவை நடைபெற உள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar