சிவகாசி; சிவகாசி மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. சிவகாசி மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா மார்ச் 30 ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் அம்மன் சிம்ம, வெள்ளி ரிஷப, கைலாச பருவத , வேதாள, யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் புரிவார். மூன்று நாட்களுக்கு முன்பு பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபட்டனர். நேற்று முன்தினம் கயர் குத்து திருவிழா நடந்தது. நேற்று தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.