Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரருக்கு ... திருமலை திருப்பதியில் ஸ்ரீவாரி வசந்தோத்சவம் பிரமாண்டமாக துவங்கியது திருமலை திருப்பதியில் ஸ்ரீவாரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் பங்குனி தேரோட்டம்
எழுத்தின் அளவு:
திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் பங்குனி தேரோட்டம்

பதிவு செய்த நாள்

10 ஏப்
2025
05:04

திருப்புவனம்; திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் - சவுந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது. 


திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் - சவுந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது தினசரி அம்மனும் சுவாமியும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் தந்தனர். நேற்று காலை நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்த நிலையில், இன்று தேரோட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இரண்டு தேர்களுக்கும் மூன்று லட்ச ரூபாய் செலவில் புதிய தேர் அலங்கார துணிகளில் 36வது திருவிளையாடல் நடந்த இடம் என்பதை குறிக்கும் படங்கள் நெய்யப்பட்டு பொருத்தப்பட்டிருந்தன. சிறப்பு பூஜைக்கு பின் பக்தர்கள் வடம் பிடிக்க தேர் நிலையை விட்டு காலை 9:30 மணிக்கு கிளம்பியது. நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்து மதியம் 12:30 மணிக்கு நிலையை வந்தடைந்தது. தேர் நிலைக்கு முன்பு மரக்கிளையில் தேர் சிக்கியதால் தேரோட்டம் சிறிது நேரம் தடைபட்டது. தேர் நிலையை வந்தடைந்ததை அடுத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பக்தர்கள் பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை சூறை விட்டார். தேரோட்டத்தை முன்னிட்டு மானாமதுரை டி.எஸ்.பி., நிரேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், எஸ் ஐ., சிவப்பிரகாசம் உள்ளிட்ட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நான்கு ரத வீதிகளிலும் பக்தர்களுக்கு நீர்மோர் பந்தல், சர்பத், அன்னதானம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் தண்ணாயிரம் மற்றும் கிராமத்தார்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமான ... மேலும்
 
temple news
முருகா என்றால் மும்மூர்த்திகளான அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் ... மேலும்
 
temple news
மேலூர்; உடன்பட்டியில் முட்புதருக்குள் மக்கள் கண்டுபிடித்த சிவன் கோயிலில் உள்ள கல்வெட்டுகளை ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; நவதிருப்பதி ஸ்தலங்களில் முதலாவது கோவிலான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சித்திரை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் புதிய பஸ்ம குளம் அமைக்க, நேற்று பூமிபூஜை போடப்பட்டது. கேரள மாநிலம், சபரிமலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar