கும்மிடிப்பூண்டி; சென்னை, வியாசர்பாடி பகுதியில் உள்ள ஓம் சிவாய நம உழவாரப்படை சார்பில், மாதந்தோறும், மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகளில், ஹிந்து கோவில்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவிலில் நேற்று, அந்த இறைப்பணி சபை சார்பில், 110வது தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கோவில் வளாகம், உள்பிரகாரம், சுவாமி வாகனங்கள் முழுதும் சுத்தம் செய்தல், செடி, கொடிகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.