Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாவை உணர்த்தும் தத்துவம்! பழநி கோயில் தங்கும் விடுதி கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு! பழநி கோயில் தங்கும் விடுதி கட்டண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அய்யப்ப பக்தர்கள் ரயிலில் தீபாராதனை செய்ய தடை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

14 டிச
2012
10:12

சென்னை: ரயிலில் பயணிக்கும் அய்யப்ப பக்தர்கள், இருமுடிக்கு, தீபாராதனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில், விழிப்புணர்வு விளம்பர பிரதிகள், பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, நாடு முழுவதில் இருந்தும், லட்சக்கணக்கான பக்தர்கள், ரயில்களில் பயணம் செய்கின்றனர். இவர்கள், தாங்கள் கொண்டு செல்லும் இருமுடிக்கு, ரயில் பயணத்தின் போது, காலை மற்றும் மாலை வேளைகளில், கற்பூரம் கொளுத்தி தீபாராதனை செய்கின்றனர்.

புகையால் பாதிப்பு: தீபாராதனை செய்யும் போது, ரயில்களில் தீ விபத்து நடக்க வாய்ப்பு ஏற்படுகிறது; "ஏசி பெட்டிகளில், தீபாராதனை செய்யும் போது, ஏற்படும் புகை, இதர பயணிகளுக்கு, பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இத்துடன், காலை மற்றும் மாலை நேரங்களில், பக்தர்கள், ரயில்களில் குளிக்கின்றனர். தண்ணீரை அதிகமாக செலவு செய்யும் போது, மற்ற பயணிகள், கழிவறை பயன்படுத்துவதற்கு தண்ணீர் இல்லாமல், திண்டாடும் நிலையும் உள்ளது. இதனால், "அய்யப்ப பக்தர்களுக்கு முக்கிய வேண்டுகோள் என்ற பெயரில், எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படையினர் மூலம், ரயில் நிலையங்களில் விழிப்புணர்வு விளம்பரம் செய்யப்பட்டது. பாதுகாப்பு குறித்த விளம்பர பிரதிகளும் வழங்கப்பட்டன."ரயிலில் பயணம் செய்யும் போது, அய்யப்ப பக்தர்கள், இருமுடிக்கு கற்பூரம் ஏற்றி, தீபாராதனை செய்யக்கூடாது; தீபாராதனை செய்யும் போது, விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. கழிவறையில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும் என, ரயில்வே பாதுகாப்பு படை துண்டு பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில்,  திருவூடல் உற்சவ நிறைவு விழாவை யொட்டி,  உண்ணாமுலையம்மன் சமேத ... மேலும்
 
temple news
பல்லடம்; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அய்யன் கோவிலில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில், ரோட்டில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், ஆதியோகி முன்பு, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் மாட்டுப்பொங்கல் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் உள்ள 8 நந்தி பெருமான்களுக்கும், மாட்டுப் பொங்கலையொட்டி சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar