பதிவு செய்த நாள்
24
மே
2025
11:05
புதுச்சேரி; பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில், மண்டலாபிஷேக பூர்த்தியை முன்னிட்டு, ராஜமாதங்கி அம்பாளுக்கு 108 சங்காபிஷேகம் நேற்று நடந்தது.
புதுச்சேரி – திண்டிவனம் பைபாஸ் சாலை, டோல்கேட் அருகே பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், மண்டலாபிஷேக பூர்த்தி, 108 கலசாபிேஷகம் மற்றும் நவசண்டியாக பெருவிழா இன்று (24ம் தேதி) துவங்குகிறது. இதையொட்டி, நேற்று காலை ராஜமாதங்கி அம்பாளுக்கு 108 சங்காபிஷேகம், மாலை வீனை கச்சேரி நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (24ம் தேதி) காலை 9:00 மணிக்கு தேவதா அனுக்ஞை, சங்கல்பம், கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், தீபாராதனை நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு 108 கலச ஸ்தாபனம், வேதிகார்ச்சனை, முதற்கால சண்டிகா நவாரண பூஜை, ஸப்தசதி பாராயணம், தீபாராதனை, கலச ஸ்தாபனம், மாத்ருகா பூஜை, மண்டப பூஜை, முதற்கால சண்டிகா நவாவரண பூஜை, ஸப்தசதி பாராயணம், தீபாராதனை நடக்கிறது.
நாளை (25ம் தேதி) காலை 5:00 மணிக்கு இரண்டாம் கால 108 கலச பூஜை, வேதிகார்ச்சனை, திரவியாஹூதி, தீபாராதனை, இரண்டாம் கால சண்டிகா நவாவரண பூஜை, சண்டி ஹோமம் ஆரம்பம், 13 ஆத்யாய ஹோமங்கள், பூர்ணாஹூதி, சவுபாக்ய திரவிய சமர்ப்பணம், வஸோத்தார ஹோமம், கன்யா பூஜை, சுமங்கலி பூஜை, பிரம்மச்சாரி பூஜை, வடுக பூஜை முதலியன, பூர்ணாஹூதி தீபாராதனை, யாத்ராதானம், கலசம் புறப்பாடு, பாலா திரிபுரசுந்தரி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கலசாபிேஷகம் நடக்கிறது. மதியம் 1:00 மணிக்கு அன்னதானம், இரவு 7:00 மணிக்கு விசேஷ அலங்காரம், பாலா திரிபுரசுந்தரி மற்றும் பரிவார மூர்த்திகள் கோவில் உள் புறப்பாடு நடக்கிறது.