மலையாண்டவர் கோவிலில் குழந்தை சுவாமி சித்தருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மே 2025 11:05
நடுவீரப்பட்டு; சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் குழந்தை சுவாமி சித்தருக்கு ரேவதி நட்சத்திரத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பாலசித்தர் குழந்தை சுவாமி சித்தருக்கு ரேவதி நட்சத்திரத்தையொட்டி நேற்று காலை 10:00 மணிக்கு சிறப்பு ேஹாமங்கள் நடந்தது. பகல் 12:00 மணிக்கு சித்தருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மதியம் 1:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி நடந்து, யாகத்தில் வைக்கப்பட்ட கல்சங்கள் ஆலய உலாவாக வந்து கலச அபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அமுது படைத்தல் நடந்தது.