பதிவு செய்த நாள்
27
மே
2025
11:05
பண்ருட்டி; திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் அமாவாசையொட்டி உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் அமாவாசையையொட்டி நேற்று காலை 6:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 7:30 மணிக்கு நித்யபடி பூஜை, 9:00 மணிக்கு உற்சவர் உள்புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, உற்சவர் பெருமாள் திருக்கண்ணாடி அறையில் அருள்பாலித்தார்.
லவர் பெருமாள் திருமாலிருஞ்சோலை கள்ளழகர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பகல் 12:30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு நடை திறப்பு, 6:00 மணிக்கு நித்யபடி பூஜை, 6:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை உற்சவர் பெருமாள் உபயநாச்சியாருடன் வசந்த உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.