அரகண்டநல்லுார் அதுல்ய நாதேஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக பெருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூன் 2025 10:06
திருக்கோவிலுார்; அரகண்டநல்லுார் அதுல்ய நாதேஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்ற விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு மூல மூர்த்திகளுக்கு அபிஷேகம், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையும், 8:30 மணிக்கு கொடியேற்றமும் நடந்தது. தொடர்ந்து, சோமஸ்கந்தருக்கு தீபாராதனை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 6ம் தேதி மாலை திருக்கல்யாணமும், 8ம் தேதி காலை 10:30 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.