பதிவு செய்த நாள்
02
ஜூன்
2025
11:06
காரைக்கால்; திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம் உற்சவம் நடந்தது.
காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் துர்முக வருஷ பிரமோற்சவ விழா கொடியேற்றம் கடந்த 23ம் தேதி விக்னேஸ்வர பூஜை,மகாகணபதி ஹோமத்துடன் துவக்கியது.பின் பஞ்சமூர்த்தி வீதி உலா கடந்த 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை விநாயகர் உற்சவமும், கடந்த 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை சுப்ரமணிய சுவாமி உற்சவமும் கடந்த 30ம் தேதி அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் செண்பகதியாகராஜர் வசந்த மண்டபம் எழுந்தருதளும், நேற்று வசந்த மண்டபத்தில் இருந்து உன்மத்த நடனத்துடன் செண்பதியாகராஜர் யதாஸ்தானம் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.வரும் 4ம் தேதி பஞ்சமூர்த்திகள் சகோபுர வீதியுலா, வரும் 6ம் தேதி தேரோட்டம்,7ம் சனீஸ்வர பகவான் தங்ககா வாகனத்தில் வீதியுலா நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், கட்டளை விசாரணை ஸ்ரீலஸ்ரீ கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.