விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயிலில் பொங்கல் வைத்து பக்தர்கள் நேர்த்திகடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூன் 2025 11:06
விருதுநகர்; வெயிலுகந்தம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு பொங்கல் வைத்து பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர்.
விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் விழா மே 27ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் அம்மன் நகர்வலம் வந்து அம்மன் கோவில் திடலில் எழுந்தருள்கிறார்.விழாவில் இன்று ஜூன் 3ல் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு பொங்கல் வைத்து நேர்த்திகடன் செலுத்தினர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை ஜூன் 4ல் கயிறுகுத்து, அக்னிசட்டி, மே 5ல் தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை விருதுநகர் ஹிந்து நாடார் தேவஸ்தானத்தினர் செய்து வருகின்றனர்.