நத்தம் கைலாசநாதர் கோவிலில் ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூன் 2025 10:06
நத்தம், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர்- செண்பகவல்லி அம்மன் கோவிலில் கடந்த மாதம் மே 31-ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து தினமும் கைலாசநாதர்,செண்பகவல்லி அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்து வருகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் காலை, மற்றும் மாலையில் கைலாசநாதர்-செண்பகவல்லி அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் இன்று மாலையும், திருத்தேரோட்டம் நாளை 8-ம் தேதி காலையும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளும், கோவில் நிர்வாகத்தினரும் செய்து வருகின்றனர்.