Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி வைகாசி ... நத்தம் கைலாசநாதர் கோவிலில் ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா நத்தம் கைலாசநாதர் கோவிலில் ரிஷப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் பிரமோற்சவ தேர் திருவிழா
எழுத்தின் அளவு:
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் பிரமோற்சவ தேர் திருவிழா

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2025
10:06

காரைக்கால் ; திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவில் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு இன்று 5 தேர் திருவிழாவில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம்பிடித்து இழுந்தனர்.

காரைக்கால் திருநள்ளாரில் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரமோற்ச விழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினம் விநாயகர் மற்றும் சுப்ரமணியர் உற்சவம் நடைபெற்றது. கடந்த 30ம் தேதி அடியார்க்கு நால்வர் புஷ்ப பல்லக்கு ஊர்வலம்.கடந்த 1ம் தேதி செண்பகதியாகராஜ சுவாமிகள் உன்மத்த நடனத்துடன் வசந்த மண்டபத்திலிருந்து யதாஸ்தானத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது அதைத் தொடர்ந்து இன்று திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவில் ஆண்டுதோறும் செண்பகத்தியாகராஜர்,நிலோத்தம்பாள், வினாயகர்,முருகன், சண்டியோஸ்வர் உள்ளிட்ட 5 தேர் திருவிழா சிறப்பாக நடந்தது. தேர் திருவிழாவை அமைச்சர் சாய் சரவணன்,தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்.சிவா எம்.எல்.ஏ, டி.ஐ.ஜி.சத்ய சுந்தரம்.

கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் ஆகியோர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர். 5தேர்கள் தெற்கு வீதியில் புறப்பட்டு வடக்கு, மேற்குவீதி வழியாக நிலைக்கு வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தியாகராஜா தியாகராஜா கேஷங்கள் முழுங்க 5தேர்களை பக்தர்கள் பக்தி வரவசத்துடன் வடம் பிடித்து இழுந்தனர்.மேலும் தேர்திருவிழாவை முன்னிட்டு பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.இன்று சனீஸ்வர பகவான் தங்ககாக வாகனத்தில் சகோபுர வீதியுலா நடைபெறுகிறது.நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 ஸ்ரீவில்லிபுத்துார்;ஸ்ரீவில்லிபுத்துார் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
கடலுார்; வடலுார் பச்சை வாழியம்மன் கோவில் தீமிதி விழாவில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
திருப்பூர்; வைகாசி விசாக தேர்த்திருவிழாவில், 63 நாயன்மார்களுக்கு பஞ்சமூர்த்திகளுக்கு காட்சியளித்தல் ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர்- செண்பகவல்லி அம்மன் கோவிலில் கடந்த மாதம் மே 31-ம் தேதி ... மேலும்
 
temple news
முதுகுளத்தூர்; முதுகுளத்தூர் அருகே பூங்குளம் கிராமத்தில் பொற்கொடியாள் சமேத பூங்குளத்து அய்யனார், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar