நத்தம்; கோவில்பட்டி கைலாசநாதர்- செண்பகவல்லி அம்மன் கோயில் திருவிழா மே 31ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி,அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம்,தீபாராதனை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் காலை, மாலையில் கைலாசநாதர்-செண்பகவல்லி அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருள வீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று மாலை திருக்கல்யாணம், நாளை காலை திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.