பதிவு செய்த நாள்
07
ஜூன்
2025
12:06
குன்னூர்; குன்னூர் ஈத்கா மைதானத்தில், பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது.
நீலகிரி மாவட்டம், குன்னூரில் பக்ரீத் திருநாளையொட்டி, குன்னூர் வண்டி பேட்டையில் இருந்து இஸ்லாமியர்கள் ஊர்வலமாக மோர்ஸ் கார்டன் அருகே ஈத்கா மைதானத்தை அடைந்தனர். அங்கு குன்னூர் சின்னப் பள்ளிவாசல் இமாம், முப்தி வசிம் அக்ரம் ஹசனி தலைமையில், சிறப்பு தொழுகை நடந்தது. இதில், பெட்போர்டு பள்ளிவாசல் முப்தி முஜிபுர் ரஹ்மான் காஸிமி , வெலிங்டன் பள்ளிவாசல் நிமதுல்லாஹ் தாவூதி, பர்லியார் இமாம் அப்துல் சலாம் யூசூபி , பாய்ஸ் கம்பெனி இமாம் கலீலுார் ரஹ்மான், அம்பிகாபுரம் பள்ளிவாசல் அப்சல், ஓட்டுபட்டறை பள்ளிவாசல் முகமது மழாஹிரி , சேலாஸ் பள்ளிவாசல் மம்நுான் உலுாமி, கே.எம்.கே நகர் பள்ளிவாசல் ஜஹாங்கீர் உலுாமி மற்றும் பள்ளி வாசல் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். அருவங்காடு பள்ளிவாசலில் தொழுகையில் இமாம் அஸ்லாம், லவ்டேல் பள்ளிவாசலில் இமாம் சுல்தான் அல்தாபி ஆகியோர் தலைமையில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தன. ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி ஈத் முபாரக் திருநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர்.