உத்திரமேரூர் வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூன் 2025 03:06
உத்திரமேரூர்; உத்திரமேரூர் ஒன்றியம், மருத்துவன்பாடியில் உள்ள ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக இன்று நடந்தது. கடந்த 6ம் தேதி கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் துவங்கியது. நேற்று முன்தினம், காலை 8:00 மணிக்கு ஷோமம் மற்றும் யாக சாலை பூஜை நடந்தது. இன்று காலை 6 : 00 மங்களஹாரத்தி, குண்டங்கள் ஹோமம் நடந்தது. 10:20 மணிக்கு, யாக சாலையில் இருந்து, பூஜிக்கப்பட்ட புனித நீர், கோவில் கோபுர கலசங்கள் மீது ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து, மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.