முட்டகுறிச்சி பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூன் 2025 03:06
இளையான்குடி; இளையான்குடி அருகே முட்டகுறிச்சி கிராமத்தில் உள்ள பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் நடைபெற உள்ளது.
இளையான்குடி அருகே குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட முட்டகுறிச்சி கிராமத்தில் உள்ள பத்திரகாளி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த 6ம் தேதி காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை,கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. இதனை தொடர்ந்து மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமமும்,மாலை 4:00 மணிக்கு முதலாம் கால யாகசாலை பூஜைகளும், 7ம் தேதி 2 மற்றும் 3 ம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன, இன்று 8ம் தேதி காலை முதல் யாகசாலை பூஜைகளும், அதனைத் தொடர்ந்து பூர்ணாஹூதியும் நடைபெற்ற பின்னர் அர்ச்சகர்கள் புனித நீர் அடங்கிய கடங்களை ஊர்வலமாக மேள,தாளங்கள் முழங்க பத்திரகாளி அம்மன் கோபுர கலசத்திற்கும் மற்ற பரிவார தெய்வங்களின் கோபுர கலசத்திற்கும் கொண்டு சென்று காலை 10:45 மணிக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதனைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு அபிஷேக,ஆராதனைகள்,பூஜைகள் நடைபெற்றன.கோயில் முன்பாக அன்னதானமும் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஹிந்து சத்ரிய நாடார் உறவின்முறையாளர்கள் மற்றும் திருப்பணி கமிட்டி உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.