வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி வசந்த விழா; 11ம் தேதி அதிகாலை வைகையில் இறங்குகிறார் பெருமாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூன் 2025 03:06
பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பவுர்ணமி வசந்த விழாவில், 11ம் தேதி அதிகாலை பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் வைகையில் இறங்குகிறார்.
எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபைக்கு பாத்தியமான வரதராஜ பெருமாள் கோயிலில் 118 வது வைகாசி வசந்த உற்சவம் நாளை காலை கும்ப திருமஞ்சனத்துடன் துவங்குகிறது. 11ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் பூ பல்லாக்கில் எழுந்தருளுகிறார். அப்போது அஷ்டாதச வாத்தியங்கள் முழங்க அநேக தீவர்த்திகள் வெளிச்சத்தில் காலை 6:00 மணிக்கு வைகை ஆற்றில் இறங்கி காட்சி தருகிறார். தொடர்ந்து காலை 10:00 மணிக்கு குதிரை வாகனத்தில் அலங்காரமாகி, மாலை 5:00 மணிக்கு வைகையில் திருச்சப்பரத்தில் சேவை சாதிக்கிறார். இரவு எமனேஸ்வரம் வண்டியூரை அடைந்து அபிஷேக, ஆராதனைகள் நடக்கிறது. ஜூன் 12 மாலை 6:00 மணிக்கு சேஷ வாகனத்தில் அலங்காரமாகி, இரவு மண்டூக மகரிஷிக்கு காட்சி அளித்தும், விடிய விடிய அவதார சேவையிலும் அருள் பாலிக்கிறார். தொடர்ந்து கருட மற்றும் அனுமார் வாகனங்களில் சேவை சாதிக்கும் பெருமாள், ஜூன் 15 இரவு மீண்டும் கள்ளழகர் திருக்கோலத்துடன் நகர்வலம் செல்கிறார். ஜூன் 16 காலை 10:00 மணிக்கு திருக்கோயிலை அடைந்து, அன்று இரவு கண்ணாடி சேவை நடக்கிறது. ஜூன் 17 உற்சவ சாந்தியு