Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலம் முருகர் கோவிலில் வைகாசி ... திருநள்ளாறு கோவிலுக்கு வெள்ளி பெட்டகம்: தருமபுரம் ஆதினம் வழங்கல் திருநள்ளாறு கோவிலுக்கு வெள்ளி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழனி முருகன் கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
வடபழனி முருகன் கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2025
10:06

சென்னை; வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக பிரம்மோத்வத்தின் முக்கிய நாளான நேற்று, திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர்.

வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக பிரம்மோத்சவம், மே 31ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை, வள்ளி, தேவசேனா சமேத சண்முகர் வீதி உலா நடந்தது. தொடர்ந்து தீர்த்தவாரி உத்சவம் நடந்தன. நேற்று மாலை, பிரம்மோத்சவத்தின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உத்சவம் துவங்கியது. சீர்வரிசை தட்டு வைத்து, யஜமான சங்கல்ப நிகழ்வு நடந்தது. அடுத்ததாக கலச பூஜை நடத்தப்பட்டு, சுவாமிக்கு பூணுால் மாற்றி, காப்பு கட்டும் வைபவம் நடந்தன. யாகசாலை வளர்த்து ஹோமங்கள் நடந்தது. அதன் தொடர்ச்சியாக மாலை மாற்றுதல், பாலும், பழமும் வழங்கும் நிகழ்வு நடந்தது. பின், திருமாங்கல்ய பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து திருமாங்கல்ய தாரணம், பொறியிடுதல் நிகழ்வு தீபாராதனை நடந்தது. பின், மந்திரபுஷ்பம், சதுர்வேதம், கூட்டு பிரார்த்தனை மகா தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று முருகனின் அருளைப் பெற்றனர். முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம் முடிந்ததும் மொய் எழுதும் வைபவம் நடந்தது. இரவில், 750 பக்தர்களுக்கு கல்யாண விருந்து வழங்கப்பட்டது. மொய் எழுதியவர்களுக்கு, சுவாமி பிரசாதமான மஞ்சள், குங்குமம், திருமாங்கல்யசரடு, வளையல் மற்றும் இனிப்பு ஆகியவை கொண்ட மஞ்சள் பை, கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது. நேற்று இரவு மயில்வாகனத்தில் புறப்பாடு நடந்தது. பின், கொடி இறக்கத்துடன் பிரம்மோத்சவம் நிறைவு பெற்றது. இன்று இரவு விசேஷ புஷ்ப பல்லக்கில் சுப்பிரமணியர் புறப்பாடு நடக்கிறது. நாளை முதல் வரும் 20ம் தேதி வரை விடையாற்றி உத்சவம் நடக்கிறது. இதில், பரதநாட்டியம், சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி இடம்பெறுகின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பவுர்ணமியன்று விரதம் இருந்து சிவ வழிபாடு செய்தால் எண்ணற்ற பலன்களை பெறலாம். சந்திரன் வழிபாடு காலத்தை ... மேலும்
 
temple news
மதுரை;  மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.மதுரையின் ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு, வெள்ளி பெட்டகத்தை தருமபுரம் ஆதினம் ... மேலும்
 
temple news
செஞ்சி; சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு கருட சேவை உற்சவம் நடந்தது.செஞ்சி ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; வைகாசி விசாகம் விழாவில், திருச்செந்துார் கோவிலில் நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar