பதிவு செய்த நாள்
10
ஜூன்
2025
10:06
ராமநாதபுரம்,; வைகாசி விசாகத்தை முன்னிட்டு, ராமநாதபுரத்தில் உள்ள முருகன்கோயில்களில் சிறப்பு அபிஷேக, பூஜைகள் நடந்தது. ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயிலில் வைகாசிவிசாக விழா மே 30 முதல் ஜூன் 9 வரை நடந்தது. நேற்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமிகோயிலில் சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து, தங்ககவசஅலங்காரத்தில் பூஜைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
இதுபோல ராமநாதபுரம் வழிவிடு முருகன்கோயில், வெளிப்பட்டணம் பாலதண்டாயுதபாணிசுவாமி கோயில், வடக்குரதவீதி பாலசுப்பிரமணி சுவாமி கோயில், கலெக்டர் அலுவலகம் அருகேவினைதீர்க்கும் வேலவர் கோயில் இரவு பூக்குழி இறங்கும் விழாவில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர். விளையாட்டு அரங்கம் அருகே மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில், குயவன்குடி சுப்பையா சுவாமி கோயில் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு அபிஷேக, அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. அழகன்குளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் பால்குடம், காவடிகள் எடுத்துவந்தனர். இரவில் பூக்குழிஇறங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.