கோவை; கோவை என். ஹெச் ரோடு -டவுன் ஹால் சந்திப்பில் அமைந்துள்ள ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் வைகாசி மாதம் கடைசி செவ்வாய்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் மஞ்சள் காப்பு அலங்காரத்துடன் சர்வ புஷ்ப அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல், வைகாசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் அருகே அமைந்துள்ள சக்தி விநாயகர் கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு அபிஷேகம், பூஜை நடந்தது . இதில் வள்ளி தேவசேனா சமேதரராக சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.