காரைக்குடி; காரைக்குடி அருகேயுள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது.
தென்திருப்பதி என்று அழைக்கப்படும் அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் வைகாசி திருவிழா கடந்த மே 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி சிம்ம, ஹனுமந்த, யானை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும் ஜூன் 8 திருக்கல்யாணம் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. காலையில் சுவாமி தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடைபெற்றது. ஜூன் 14 தெப்பமும், ஜூன் 15 புஷ்ப பல்லாக்கும், விடையாற்றி விழாவும் நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் முத்துமீனாட்சி, செயல் அலுவலர் விநாயகவேல் செய்து வருகின்றனர்.