Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சொர்க்கவாசல் நுழைவுக்கான வி.ஐ.பி., ... திருத்தணி முருகன் கோவிலில் 31ம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லையப்ப தம்பிரான் ஆனார் திருச்சிற்றம்பலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 டிச
2012
11:12

மதுரை: மதுரை ஆதீனம் மடத்தின் புதிய தம்பிரான் திருச்சிற்றம்பலத்திற்கு மொட்டை அடிக்கப்பட்டு, தீட்சை அளிக்கப்பட்டு, காதில் வளையம் மாட்டப்பட்டது. ""இதற்கு நித்யானந்தா உட்பட யாரும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது, என்றார் மூத்த ஆதீனம். நித்யானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்து, சர்ச்சையில் சிக்கிய மதுரை ஆதீனம், டிச.,9 ல், திருவாவடுதுறை ஆதீன மடத்தின் தம்பிரான் திருச்சிற்றம்பலத்தை, உதவியாளராக நியமித்துக் கொண்டார். இதற்காக, "தம்பிரான் என்ற பதவியையும் உருவாக்கினார். மடத்தின் சம்பிரதாய பூஜைகளில் உதவியாக இருந்து வரும் திருச்சிற்றம்பலத்திற்கு, டிச., 10 முதல், தீட்சைகள் அளிக்கும் சடங்கு துவங்கியது. நேற்று முன் தினம், அவருக்கு மொட்டை அடிக்கப்பட்டது; மந்திர காசாயம், நிர்வாண தீட்சை அளிக்கப்பட்டு, காதில் வளையம் மாட்டும் "சுந்தரவேடம் என்ற சடங்கு நடந்தது.

தினமலர் நிருபருக்கு, ஆதீனம் அளித்த பேட்டி:

* இளைய ஆதீனமாக நியமிப்பதற்கான சடங்கா இது?
மீண்டும் மீண்டும் சொல்கிறேன்... தம்பிரான், இளைய ஆதீனம் அல்ல. இச்சடங்குகள், தம்பிரானுக்கும் உரியது.

* அவரது பெயர் மாற்றப்பட்டுள்ளதா?
ஆம். "ஸ்ரீமத் நெல்லையப்ப தம்பிரான் என, அழைக்கப்படுவார்.

* இதற்கு, நித்யானந்தா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதா?
அவர் எப்படி எதிர்க்க முடியும்? அவரைத் தான் நீக்கிவிட்டேனே. அவருக்கும், மடத்திற்கும் சம்பந்தமில்லை. திருவாவடுதுறை ஆதீன மடத்தின் சம்மதத்தோடு, இங்கு திருச்சிற்றம்பலம் வந்துள்ளதால், யாரும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது.

* மடத்தின் விவகாரம் கோர்ட் வரை சென்றுவிட்டதே?
அதுகுறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கரூர்; கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் இன்று 28ம் தேதி கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
போத்தனூர்: மதுக்கரை மரப்பாலம் பகுதியில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. தைப்பூசம் துவக்கம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் தை மாத கார்த்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பழநி ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை மாத கார்த்திகை பூஜை விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar