Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நெல்லையப்ப தம்பிரான் ஆனார் ... லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் 31ம் திருப்படித் திருவிழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 டிச
2012
11:12

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், வரும், 31ம் தேதி திருப்படித் திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு, போதிய அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு அளிப்பது குறித்து, வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை மற்றும் திருப்படித் திருவிழா என, இரு விழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, மூலவரை தரிசிப்பர். வரும், 31ம் தேதி திருப்படி திருவிழாவும், ஜனவரி, ஒன்றாம் தேதி புத்தாண்டு தரிசனம் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள, நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட, பக்தர்கள் வருவார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விழாவிற்கு வருகை தரும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு முன், ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் திருத்தணி கோட்டாட்சியர் கலைவாணி தலைமையில் நேற்று நடந்தது. இணை ஆணையர் புகழேந்தி வரவேற்றார். கோவில் தக்கார் ஜெயசங்கர் முன்னிலை வகித்தார். தொடர்ந்து கோட்டாட்சியர் கலைவாணி பேசுகையில், ""விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு, தேவையான குடிநீர், கழிப்பறை உட்பட, அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம், நகராட்சி நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம் ஆகியன ஒற்றுமையுடன் சேர்ந்து, சிறப்பாக செய்ய வேண்டும். அனைத்து துறை அதிகாரிகளும் ஒத்துழைப்பு இருந்தால் தான், விழா சிறப்பாக நடத்த முடியும், என்றார். ""வரும், 31ம் தேதி மற்றும் புத்தாண்டு ஆகிய இரு நாட்களுக்கு, 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என, ஏ.எஸ்.பி., விஜயகுமார் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி, திருஆவினன்குடி, குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் அரோகரா கோஷத்துடன் நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோவிலில் 17 ஆண்டுகள் பின் இன்று ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், சோமவார சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் நான்காவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை ராம் நகர் கோதண்டராம சுவாமி ... மேலும்
 
temple news
பாட்னா: பீஹாரில், ஏழுமலையான் கோவிலை கட்டுவதற்கு அம்மாநில அரசு, 10.11 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி உள்ளதாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar