திருக்கோவிலூர் சீரடி குபேர சாய்பாபா கோவில் ஆண்டு விழா; ஆரத்தி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூன் 2025 02:06
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், தியாகி வடிவேல் நகரில் அமைந்துள்ள சீரடி குபேர சாய்பாபா ஆலயத்தின் 4ம் ஆண்டு துவக்க விழா நடந்தது. திருக்கோவிலூர் தியாகி வடிவேல் நகரில், புதிதாக கட்டப்பட்ட சீரடி குபேர சாய்பாபா ஆலயத்தின் 4ம் ஆண்டு துவக்க விழா இன்று நடந்தது. காலை 8:00 மணிக்கு கோமாதா பூஜையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து கலச ஸ்தாபனம், யாகசாலை பூஜைகள், மூலவருக்கு பக்தர்களால் அபிஷேகம், தங்க கவச அலங்காரம், ஆரத்தி பூஜை நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை, மதியம் 1:30 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, ஆரத்தி பூஜை, சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகள் ஆலய நிர்வாகி சுப்பு மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.