காரைக்கால் சீதளா தேவி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூன் 2025 02:06
காரைக்கால்; காரைக்கால் கீழகாசாக்குடி ஸ்ரீ சீதளா தேவி மாரியம்மன் கோவிலில் மகா தீமிதி திருவிழா நடைபெற்றது.
காரைக்கால் கீழகாசாகுடி பழமை வாய்ந்த ஸ்ரீ சீதளா தேவி மாரியம்மன் கோவிலில் கடந்த 10ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, கொடியேற்றத்துடன் தீமிதி திருவிழா துவங்கியது. பின்னர் தினமும் சீதளா தேவி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று சீதளா தேவி மாரியம்மன்க்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் கோவில் அருகில் குண்டம் அமைக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து, தீமிதித்து நேர்த்திக் கடனை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் திருமுருகன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.