ஆனி அமாவாசை; ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூன் 2025 05:06
ராமேஸ்வரம்; ஆனி அமாவாசையான இன்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். இதையொட்டி தமிழகத்தின் பல பகுதியில் இருந்து பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்தனர். பின் அக்னி தீர்த்தத்தில் புனித நீராடி விட்டு கோயில் வளாக 22 தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர். அதன்பின் கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த பூஜையில் பங்கேற்று தரிசித்தனர். ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் கோயில் மேலவாசல் அக்னி தீர்த்த கடற்கரை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.