ஆனி வெள்ளி; அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்.. பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூன் 2025 10:06
கோவை; ஆனி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையைமுன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் - தென்னம்பாளையம் ரோடில் அமைந்துள்ள அங்காளம்மன் கோவிலில் இருக்கும் மூலவர் அம்மனுக்கு அபிஷேகம் பூஜை நடந்தது இதில் மஞ்சள் காப்பு அலங்காரத்துடன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் தீப ஒளியில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் தென்னம்பாளையம் ரோட்டில் உள்ள மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம். பூஜைகள் நடைபெற்றது. இதில் சந்தன காப்பு அலங்காரத்துடன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.