செவிலிமேடு; ஆனி மாத திருவாதிரை திருநட்சத்திரத்தையொட்டி செவிலிமேடு ராமானுஜருக்கு நேற்று திருமஞ்சனம் நடந்தது. காஞ்சிபுரம் மாநகராட்சி செவிலிமேடில் ராமானுஜருக்கு தனி சன்னிதி உள்ளது. இங்கு ஆனி மாத திருவாதிரை திருநட்சத்திரத்தையொட்டி, நேற்று காலை, 10:00 மணிக்கு ராமானுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம், மஹாதீப ஆராதனையும் நடந்தது. தொடர்ந்து வெள்ளி கவசம் மற்றும் மலர் அலங்காரத்தில் ராமானுஜர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.