Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனாட்சி சுந்தரேசர் பெருமாள் ... சிறந்த சேவையாற்றியவர்களுக்கு விருது வழங்கி ஆசி வழங்கிய காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சிறந்த சேவையாற்றியவர்களுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பஜனை என்பது ஆன்மிக உணர்வுடன் கூடிய சுகமான அனுபவம்; 100 ஆண்டுகள் நிறைவு
எழுத்தின் அளவு:
பஜனை என்பது ஆன்மிக உணர்வுடன் கூடிய சுகமான அனுபவம்; 100 ஆண்டுகள் நிறைவு

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2025
10:07

கோவை; பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவில் பஜனை குழு, 100 ஆண்டுகள் நிறைவடைந்த பெருமை பெற்றதாக விளங்குகிறது.


கடவுளை இசை வடிவில் வழிபடவே பஜனை தோன்றியது. அக்காலத்தில் பொழுதுபோக்குக்காக நாடகம், நாட்டியம் இருந்தபோது, இறைவனை வழிபட பலர் சேர்ந்து, அந்தந்த பகுதிகளில் உள்ள இறைவனுடைய துதி பாடல்கள், புரந்தரதாசர் கீர்த்தனைகள், கனகதாசர் கீர்த்தனைகள், திவ்ய பிரபந்த பாடல்கள், உள்ளூர் பக்தி பாடல்களை இசை கருவிகளுடன், கோவில்களில், வாய்மொழியாக இறைவனை துதித்து பாடப்பட்டதே பஜனை எனப்படுகிறது. முதலில் அம்மன் கோவில், பெருமாள் கோவில்களில் பாடப்பட்ட பாடல்கள், பிற்காலத்தில் சனிக்கிழமை தோறும் பெருமாள் கோவில்களில் பிரதானமாக பாடப்பட்டது. காலப்போக்கில் குறிப்பாக, பெருமாள் கோவில்களில் புரட்டாசி, மார்கழி உள்ளிட்ட பல்வேறு முக்கிய விழா காலங்களில் பஜனை என்பது முக்கிய சம்பிரதாயமாக மாறியது. மார்கழி மாதம் முழுவதும், ஆண்டாள் திருவுருவப்படத்தை கைகளில் ஏந்தி, அதிகாலை பெருமாள் கோவிலை சுற்றியுள்ள முக்கிய வீதிகளில், இசைக்கருவிகளுடன் ஆண்டாள் திருப்பாவையை பாடியபடி நகர் வலம் வருவது, ஒவ்வொரு பஜனை குழுவின் முக்கிய நோக்கமாக மாறியது. இதில் ஆண்களும், பெண்களும் பக்தி உணர்வுடன் திருப்பாவையின், 30 பாடல்களையும் பாடி வலம் வருவர்.


பெரியநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் பஜனை குழுவினர் இது குறித்து கூறுகையில், நூறாண்டு பழமையான எங்கள் பஜனை குழுவில் தற்போது சுமார், 40 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இப்போதும் சனிக்கிழமை தோறும் கோவிலில் இரவு, 2 மணி நேரம் பெருமாளை துதித்து, பஜனையில் ஈடுபடுகின்றோம். விட்டல்தாஸ் மகராஜ், செங்கோட்டை ஹரிஹர சுப்பிரமணியம் உள்ளிட்ட பல்வேறு குழுவினரின் ராதா கல்யாணம் உள்ளிட்ட தொடர் பஜனை நிகழ்வுகள் பல்வேறு இடங்களில் நடப்பதால், இன்று இளைஞர்களிடம் பஜனை சம்பிரதாயம் குறித்த ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. பஜனை என்பது ஒரு ஆன்மிக உணர்வுடன் கூடிய ஒரு சுகமான அனுபவம். இதற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: பொங்கல் பண்டிகைக்கு, வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் வழங்கியுள்ளனர் கோவையிலுள்ள ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மார்கழி நிறைவு சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர், வெள்ளி மோட்டான் தெருவில் உள்ள சோலைவாழி மாரியம்மன் கோவிலில் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏரிவாய் கிராமத்தில் உள்ள மணவாள பெருமாள் கோவிலில் நேற்று, ஆண்டாள் திருக்கல்யாண உத்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar