Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பஜனை என்பது ஆன்மிக உணர்வுடன் கூடிய ... திருச்செந்தூர் கும்பாபிஷேகத்திற்கு செல்லும் பெரியகுளம் வெற்றிலை திருச்செந்தூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிறந்த சேவையாற்றியவர்களுக்கு விருது வழங்கி ஆசி வழங்கிய காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
எழுத்தின் அளவு:
சிறந்த சேவையாற்றியவர்களுக்கு விருது வழங்கி ஆசி வழங்கிய காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2025
10:07

சென்னை; சங்கரா கல்வி, மருத்துவ குழுமங்களில் பல ஆண்டுகளாக சிறந்த சேவையாற்றியவர்களுக்கு, காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விருதுகளை வழங்கி ஆசிர்வதித்தார்.


பம்மல் சங்கர வித்யாலயாபள்ளிக்கு விஜயம் செய்துள்ள காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று காலை அங்குள்ள சுந்தர விநாயகர், ஆஞ்சநேயர், அய்யப்பன் கோவிலுக்கு விஜயம் செய்து தரிசித்தார். பின், சங்கர வித்யாலயா திரும்பிய மடாதிபதி, மகா திரிபுரசுந்தரி சமேத சந்திரமவுளீஸ்வரர் பூஜை நடத்தினார். பின், பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதையடுத்து, சவுந்தர்யலகரி பாராயணம் நடந்தது.அதைத் தொடர்ந்து, 2,535 ஆண்டுகள் காஞ்சிமட பாரம்பரியம் குறித்து, நெரூர் ரமண சர்மா உபன்யாசம் நடந்தது. நேற்று மாலை பம்மல் சங்கரா மெட்ரிக்குலேஷன் பள்ளி, குளோபல் பள்ளி, நர்சிங் கல்லுாரி, ஆப்டோ மேட்ரிக் கல்லுாரி, பல்நோக்கு மற்றும் கண் மருத்துவமனை, முதியோர் இல்லம் ஆகியவற்றில், ஐந்து முதல் 30 ஆண்டுகளுக்கு மேலாக சேவையாற்றியவர்கள் கேடயம், பரிசுத் தொகையை வழங்கி, விஜயேந்திரர் ஆசிர்வதித்து அருளாசி வழங்கினார். இதைத் தொடர்ந்து திருமணம் ஆகாதவர்களுக்கு, விரைவில் திருமணம் நடக்க ஸ்வயம்வர பார்வதி பூஜை நடத்தப்பட்டது. இன்று காலை சந்திரமவுலீஸ்வர் பூஜை, மாலை குன்றத்துார் கந்தழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு துவக்கப்படும் யாகசாலை பூஜைகளில் பங்கேற்கிறார். வரும், 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை, திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த தண்டலம், சங்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு விஜயம் செய்து, பூஜைகள் நடத்தி, பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ரிஷிவந்தியம்; பாவந்துாரில் மாரியம்மன் கோவில் தீமிதி மற்றும் தேர்திருவிழா இன்று ... மேலும்
 
temple news
கோவை; கோவை – பாலக்காடு ரோடு, மதுக்கரை, மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்; களியாம்பூண்டி கனகபுரீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா இன்று நடந்தது.உத்திரமேரூர் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 
temple news
கோவை; பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவில் பஜனை குழு, 100 ஆண்டுகள் நிறைவடைந்த பெருமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar