Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் ... சேலம் கோட்டை மாரியம்மனுக்கு புதிய தேர் வௌ்ளோட்டம் சேலம் கோட்டை மாரியம்மனுக்கு புதிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மத நல்லிணக்க முகரம் பண்டிகை: தலையில் நெருப்பு கங்குகளை கொட்டி நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
மத நல்லிணக்க முகரம் பண்டிகை: தலையில் நெருப்பு கங்குகளை கொட்டி நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2025
01:07

சாயல்குடி; ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே பெரியகுளத்தில் முகரம் பண்டிகையை முன்னிட்டு மத நல்லிணக்க நிகழ்ச்சியாக நேர்த்திக்கடன் பெண் பக்தர்கள் தலையில் நெருப்பு கங்குகளை கொட்டியதோடு, ஆண்கள் அக்னி குண்டத்தில் இறங்கினர்.


சாயல்குடி அருகே பெரியகுளத்தில் பழமை வாய்ந்த மாமு நாச்சி அம்மன் தர்கா உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் முகரம் பண்டிகையை முன்னிட்டு மத நல்லிணக்க பூக்குழி இறங்கும் விழா பல நுாற்றாண்டுகளாக நடந்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. முன்னதாக கடந்த ஆண்டு நடந்த அக்னி குண்டத்தின் அடியில் மண்பானையில் வைக்கப்பட்ட பானகம் மற்றும் பச்சரிசி மாவு ரொட்டி துண்டுகள் எடுக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படும். மீண்டும் திருவிழா நிறைவடைந்தவுடன் இதே போன்று புதிதாக வைக்கும் நடைமுறை உள்ளது. நேற்று முன்தினம் சப்பரத்தின் உள்ளே வெள்ளியால் வடிவமைக்கப்பட்ட கை உருவங்கள் மல்லிகை சரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக பவனி வந்தது. பெரியகுளம் கிராமம் முழுவதும் மின்னொளியால் வழி நெடுகிலும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மாமுநாச்சி அம்மன் தர்கா முன்புறம் வட்ட வடிவத்தில் பெரிய அக்னி குண்டம் வளர்க்கப்பட்டது. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நேர்த்திக்கடன் பக்தர்கள் கையில் பச்சை வண்ண பிறை கொடியுடன் அக்னி குண்டத்தில் இறங்கினர். நேர்த்திக்கடன் கொண்ட பெண்கள் தலையில் முக்காடிட்டு அமர்ந்திருக்க மண்வெட்டியால் நெருப்பு கங்குகளை தலையில் கொட்டும் நிகழ்ச்சி நடந்தது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள், ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டனர். இரவில் வள்ளி திருமணம் நாடகம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar