Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனி வெள்ளி; விளமல் பதஞ்சலி மனோகரர் ... உத்தரகோசமங்கையில் பாதுகாக்கப்படும் வேத வியாசரின் பாதுகைக்கு சிறப்பு பூஜை உத்தரகோசமங்கையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் பூட்டியதால் காரைக்கால் அம்மையாருக்கு சீர்வரிசை எடுத்து செல்லும் நிகழ்ச்சி தாமதம்
எழுத்தின் அளவு:
கோவில் பூட்டியதால் காரைக்கால் அம்மையாருக்கு சீர்வரிசை எடுத்து செல்லும் நிகழ்ச்சி தாமதம்

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2025
03:07

காரைக்கால்; காரைக்கால் அம்மையாருக்கு சீர்வரிசை எடுத்த செல்லும் நிகழ்ச்சியில் இருதரப்பினர்களுக்கு இடையோ ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் கோவில் பூட்டியதை கண்டித்து சீர்வரிசையுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.


காரைக்கால் மாவட்டத்தில் சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார் 63 நாயன்மார்களின் பெண் நாயன்மாரான காரைக்கால் அம்மையாரின் வாழ்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் மாங்கனி திருவிழா கடந்த 8ம் தேதி மாப்பிளை அழைப்புடன் தொடங்கியது. கடந்த 9ம் தேதி காரைக்கால் அம்மையார் பரமதத்தருக்கு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று முன்தினம் சிவபெருமான் காவியுடைருத்திராட்சம் தாங்கி பிச்சாண்டவர் மூர்த்தியாக எழுந்தருளி வீதி உலா நடந்தது. அப்போது மாங்கனி வீசும் நிகழ்ச்சி நடந்தது.இரவு அமுது படையல் நிகழ்ச்சி நடந்தது. பரமதத்தர் கப்பலேறி பாண்டிய நாடாகிய சித்தி விநாயகர் கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடந்தது. அப்பொழுது நேற்று இரவு 11மணிக்கு காரைக்கால் அம்மையார் புஷ்ப பல்லக்கு செல்லும் நிகழ்ச்சி வலத்தெரு ஸ்ரீ தெஷ்ணமுத்து மாரியம்மன் கோவிலிருந்து நாடார் சங்கத்தினர் சீர்வரிசை எடுத்து சென்று அம்மையாரை புஷ்ப பல்லக்கில் ஏற்றி வீதியுலா நடத்துவது வழக்கம்.ஆனால் நாடார் சங்கத்தினர் சீர்வரிசை எடுக்க கோவிலுக்கு சென்ற போது மற்றொரு பிரிவினர் கோவிலை பூட்டி சாவியை எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் அம்மையாருக்கு சீர்வரிசை எடுத்து செல்லும் நிகழ்ச்சி தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் காங், தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் இளைஞர் காங்,கட்சி மாவட்ட தலைவர் ரஞ்சித் மற்றும் தி.மு.க. பிரமுகர் விவசாய அணி அமைப்பாளர் பிரபு ஆகியோர் தலைமையில் சீர்வரிசையுடன் கோவில் வாசல் முன்பு நாடார் சங்கத்தினர் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பின்னர் தகவல் அறிந்த வட்டாட்சியர் செல்லமுத்து தர்மாவில் ஈடுப்பட்ட நபர்களிடம் இரு பிரிவினருக்கு இடையே உள்ள பிரச்சனை காரணமாக திருவிழா தடைப்படக்கூடாது எனவும் நீங்கள் சீர்வரிசை எடுத்து செல்லுமாறு அகிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு நாடார் சங்கத்தினர் கோவில் வாசலில் வைத்து சீர்வரிசையை எடுத்து சென்றனர். இருதரப்பினர்களுக்கு இடையோ ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் அம்மையார் புஷ்ப பல்லக்கில் பாண்டிய நாடு செல்லும் நிகழ்ச்சிக்கு சீர்வரிசை எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி தாமதமானதால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar