Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏழாம் படை வீடாக கருதப்படும் ... கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ஏகாதசி சிறப்பு வழிபாடு கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விக்ஞான கிரி மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகை விழா
எழுத்தின் அளவு:
விக்ஞான கிரி மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகை விழா

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2025
10:07

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான விக்ஞான கிரி மலை மீது வீற்றிருக்கும் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகை விழா சிறப்பாக நடைபெற்றது. நேற்று அதிகாலை முதலே விக்ஞான கிரி மலைக்கு பூ காலடிகளை சுமந்து நீண்ட வரிசையில் நின்று வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தனர். முன்னதாக சிவன் கோயில் அதிகாரிகள் விக்ஞான கிரி மலையை கண்கவரும் வகையில் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சிவன் கோயில் செயல் அலுவலர் பாபி ரெட்டி தலைமையில் கடந்த மூன்று நாட்களாக கோயிலில் விக்ஞான கிரி மலை மீது பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்ததோடு சிறப்பாக உள்ளதா என்று உறுதி செய்ய பல முறை ஆய்வு செய்தனர். 


பக்தர்கள் எந்த வித இடையூறும் இன்றி சாமி தரிசனம் செய்வதோடு தொடர்ந்து சிவன் கோயில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப் பட்டது. முன்னதாக நேற்று ஆடிக்கிருத்திகை விழாயையொட்டி காளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் வீற்றிருக்கும் வள்ளி தெய்வானை சமேத செங்கல்வராய சுவாமி வெள்ளி இந்திர விமான வாகனத்தில் ஸ்ரீ காளஹஸ்தி நகரின் நான்கு மாட வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதே போல் விக்ஞான கிரி மலை மீது வீற்றிருக்கும் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகை விழாயை யொட்டி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து பக்தர்கள் ஸ்ரீ காளஹஸ்தி நகரிலிருந்து மட்டுமின்றி  சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூ காவடிகள் சுமந்து கொண்டு விக்ஞானகிரி மலை ஏறி சாமி தரிசனம் செய்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் கோயில் அருகில் உள்ள நாரதர் புஷ்கரணியில் முடி காணிக்கை செலுத்தி புனித நீராடி முருகனை வணங்கி தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தினர். நாரதர் குளத்தில் பக்தர்களுக்கு எந்த வித இடையூறும் வராமல் சிவன் கோயில் செயல் அலுவலர் பாபி ரெட்டி, அதிகாரிகளுக்கு தகுந்த வழி நெறிமுறைகளை வழங்கினார். சாமி தரிசனம் செய்த அதிகாரிகள் சுமார் ஐம்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய காவடிகளை ஏந்தி வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தியதாக தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம்  நான்காம் சனிக்கிழமை என்பதால்  இலவச தரிசனத்திற்கு 20 ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; புரட்டாசி மாதம்  கடைசி சனிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய ... மேலும்
 
temple news
மகாபலிபுரம்; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதிசுவாமிகள், அக்., 3ல் ... மேலும்
 
temple news
மதுரை: தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு சங்கடஹர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar