Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுருளி அருவியில் திரண்ட கூட்டம் : ... ஆடி அமாவாசை தர்ப்பணம்; காரைக்குடி பகுதியில் குவிந்த மக்கள் ஆடி அமாவாசை தர்ப்பணம்; காரைக்குடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி அமாவாசை; பேரூர் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
எழுத்தின் அளவு:
ஆடி அமாவாசை; பேரூர் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2025
02:07

தொண்டாமுத்தூர்; பேரூர் படித்துறையில், ஆடி அமாவாசையையொட்டி, பல்லாயிரக்கணக்கான மக்கள், தங்களின் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தனர்.


முன்னோர்களுக்கு, அவர்களின் சந்ததியினர், ஆண்டுதோறும் திதி, தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை வழிபடுவது நமது வழக்கம். குறிப்பாக, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை, ஆடிப்பெருக்கு தினங்களில், முன்னோர்களுக்கு, திதி, தர்ப்பணம் கொடுத்து, முன்னோர்களை வழிபட்டால், குடும்பம் செழிக்கும். இதனால், முக்தி ஸ்தலமான பேரூரில், ஆண்டு முழுவதும், பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வந்து தங்களின் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு செல்கின்றனர். இந்நிலையில், ஆடி அமாவாசை தினமான இன்று அதிகாலை முதலே, தமிழகம் மற்றும் கேரளாவின் பல பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள், பேரூர் படித்துறைக்கு குவிந்தனர். அங்கு, புரோகிதர் முன்னிலையில், முன்னோர்களுக்கு பிண்டம் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து, பசுமாட்டிற்கு அகத்திக்கீரையும், ஏழை எளிய மக்களுக்கு, அன்னதானமும் கொடுத்து சென்றனர். கோவிலில், நெய் விளக்கு ஏற்றியும் பொதுமக்கள் வழிபட்டனர். கடந்த மே மாதம் திறக்கப்பட்ட புதிய தர்ப்பண மண்டபம் மற்றும் ஆற்றின் கரையில் இருந்து பழைய தர்ப்பண மண்டபத்திலும், ஆயிரக்கணக்கான மக்கள், தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்ததால், பேரூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 40க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நொய்யல் ஆற்றில், பழைய துணிகளை வீச வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாதிரை நடராஜரை வழிபட சிறந்த நாள் ஆகும். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாகவும் ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar