Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிளேக் மாரியம்மனை ஊஞ்சலில் வைத்து ... முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆடி ஊஞ்சல் உற்சவம் முறையூர் மீனாட்சி சொக்கநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடல் கடந்து வெற்றிகளை குவித்த ராஜேந்திர சோழனும்.. கங்கை கொண்ட சோழபுரமும்..!
எழுத்தின் அளவு:
கடல் கடந்து வெற்றிகளை குவித்த ராஜேந்திர சோழனும்.. கங்கை கொண்ட சோழபுரமும்..!

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2025
11:07

தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் மூலமாக வட இந்தியா மட்டுமின்றி, கடல் கடந்தும் வெற்றிகளை குவித்தார்.


தஞ்சையை ஆட்சி செய்த ராஜராஜ சோழனின் மகன் தான் ராஜேந்திர சோழன். முதன்முதலில், கடற்படை அமைத்த பெருமை, முதலில், இலங்கையின் மீது, போர் தொடுத்து வென்று, இலங்கையை ஆட்சி செய்த தமிழக மன்னன் என்ற பெருமையை பெற்றார். மதுரை, கேரளா உள்ளிட்ட தென்பகுதி முழுவதும், தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். கங்கையை கடந்து சென்று, பல பகுதிகளில் போர் செய்து, வெற்றியுடன் திரும்பி வந்து கங்கை கொண்ட சோழபுரத்தை உருவாக்கினார். இந்தோனேஷியா, சுமத்ரா தீவில், கடற்கொள்ளையர்களுடன் போரிட்டு வென்று கடல்வழி வணிகத்தை மேம்படுத்தினார். வலிமையான, வளமான ஆட்சி புரிந்த, ராஜேந்திர சோழன் பெருமைகளை, இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும்.


கங்கை கொண்ட சோழபுரம்; தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனுக்கும்,  திரிபுவனமாதேவிக்கும் மார்கழி திருவாதிரையன்று பிறந்தவர் ராஜேந்திர சோழன். இயற்பெயர் மதுராந்தகன். இவரது ஆட்சிக்காலம் கி.பி. 1012- 1044. கடல் கடந்து பல நாடுகளை வென்றதால் இவருக்கு "கடாரம் கொண்டான் என்ற பட்டம் கிடைத்தது. தன் தந்தை தஞ்சாவூரில் கட்டிய கோயிலைப்போல், அரியலுார் கங்கைகொண்ட சோழபுரத்தில் பெரிய கோயில் கட்டி, லிங்கத்தையும் நந்தியையும் பெரிதாக பிரதிஷ்டை செய்தார். தஞ்சாவூரை போலவே சிவனுக்கு பிரகதீஸ்வரர் என்றும், அம்மனுக்கு பெரியநாயகி என்றும் பெயர் சூட்டினார்.


தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கம் இங்கு தான் உள்ளது. இங்குள்ள நந்தி சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டு தரையில் அமர்ந்துள்ளது. இங்கு மூலஸ்தானத்திலிருந்து 200 மீட்டர் இடைவெளியில் உள்ளது. தினமும் பகலில் இந்த நந்தியின் மீது சூரிய ஒளிபட்டு, அந்த ஒளி கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது பிரதிபலிப்பது மிகவும் சிறப்பு. மூலஸ்தானத்தில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டு இருட்டில் லிங்கத்தைப் பார்த்தால் மிகவும் அற்புதமாக இந்த ஒளி தெரியும் வகையில் வடிவமைத்துள்ளனர் நம் சிற்ப வல்லுனர்கள். கோபுர கலசத்தின் நிழல் கீழே விழுவது கிடையாது. 


சந்திரகாந்த கல்; கருவறையில் உள்ள லிங்கத்தின் அடியில் சந்திரகாந்த கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், வெயில் காலத்தில் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும். குளிர் காலத்தில் குளிர்ச்சியை குறைத்து இதமான வெப்பத்தை தரும். பெரிய நாயகி அம்மன் பெயருக்கேற்றாற் போல் 9.5 அடி உயரத்தில் பிரமாண்டமாக அருள்பாலிக்கிறாள். இங்குள்ள நவக்கிரகம் மற்ற கோயில்களை போல் இல்லாமல், ஒரே கல்லில் தாமரைப்பூ வடிவில் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. 


பிரதமர் மோடி வருகை; பிரசித்தி பெற்ற இந்த பிரகதீஸ்வரை தரிசனம் செய்ய பிரதமர் மோடி நாளை அரியலுார் கங்கைகொண்ட சோழபுரம் வருகிறார். முதலாம் ராஜேந்திர சோழனை கவுரவிக்கும் வகையில், நினைவு நாணயம் வெளியிடுகிறார் பிரதமர் . சோழபுரம் கோவிலில் நடக்கும், ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்று பிறகு திருச்சியில் இருந்து டில்லி செல்கிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு  சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி 2ம் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 9ம் நாளான இன்று காலை ... மேலும்
 
temple news
டேராடூன்:  உத்தரகண்ட் மாநிலம் கௌரிகுண்ட் அருகே உள்ள கேதார்நாத் தாம் பகுதிக்கு மலையேற்றப் பாதை நேற்று ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar