உலகளந்த பெருமாள் கோவிலில் ஆடிப்பூர விழா; ஆண்டாளுக்கு அக்காரவடிசில் நெய்வேத்தியம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூலை 2025 03:07
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் ஆடிப்பூர விழாவில் ஆண்டாளுக்கு நூர்தடா அக்காரவடிசில் நெய்வேத்தியம் நடந்தது.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஆடிப்பூர பெருவிழாவில் இன்று காலை 6:00 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 7:30 மணி வரை நித்திய பூஜைகள், 8:00 மணிக்கு ஆண்டாள்நாச்சியார் சமேத தேகளீச பெருமாள் தங்க பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. மதியம் 12:00 மணிக்கு கண்ணாடி அறையில் சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம், சிறப்பு அலங்காரத்தில் மாலை 2:30 மணிக்கு நூர்தடா அக்காரவடிசில் நெய்வத்தியம் செய்யப்பட்டது. சாற்றுமரை, பிரசாத விநியோகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு ஆண்டாள் நாச்சியார் சமேத தேகளீச பெருமாள் திருக்கல்யாண வைபவம் பெரியாழ்வார் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியார் உத்தரவின் பேரில், தேவஸ்தான ஏஜென்ட் கோலாகலன் மேற்பார்வையில் விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.