ஆடி வளர்பிறை சஷ்டி; முருகன் கோவில்களில் பக்தர்கள் பரவச தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூலை 2025 10:07
கோவை; ஆடி வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு கோவை கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவை, சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் அருகே அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் இருக்கும் பாலமுருகனுக்கு அபிஷேகம். பூஜை நடந்தது. இதில் விபூதி காப்பு அலங்காரத்துடன் சர்வ புஷ்ப அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
* கோவை பெரியநாயக்கன்பாளையம் - குப்பிச்சிபாளையம் ரோடில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம், பூஜை நடந்தது.
* கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ்-1 ல் உள்ள கம்பீர விநாயகர் கோவிலில் இருக்கும் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.